ஈரோடு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப் பார்வையாளர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப் பார்வையாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  

DIN

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப் பார்வையாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி மாணிக் குர்ஷால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை,  ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையைப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.விக்னேஷ், அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   பொதுப்பார்வையாளர் மாணிக் குர்ஷாலிடம் தேர்தல் குறித்த புகார்களை 9585387142 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT