ஈரோடு

பவானி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

DIN

பவானி ஆற்றில் மூழ்கி மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பவானியை அடுத்த அத்தாணி அருகே பவானி ஆற்றில் தங்கவேல் தோட்டம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். 
உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரங்கள் தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் ஜாக்கெட்டும், ஊதாப்பூ நிறத்தில் புடவையும் அணிந்திருந்தார். ஆற்றில் குளிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  இதுகுறித்து, ஆப்பக்கூடல்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT