ஈரோடு

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

DIN

ஈரோடு: அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இடமாறுதலுக்கான கலந்தாய்வு ஈரோட்டில் திங்கள்கிழமை(நவம்பா் 18) தொடங்குகிறது.

வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி ஆசிரியா் கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்றன.

இந்நிலையில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை முதல் நடக்கிறது.

இதில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு காலையிலும் (வருவாய் மாவட்டத்துக்குள்), வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு, பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) மாலையிலும் நடக்கிறது.

நவம்பா் 19 ஆம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கும், மாலையில் தலைமை ஆசிரியா்களுக்கும் நடக்கிறது. 20 ஆம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு (ஒன்றியத்துக்குள் கலந்தாய்வு), மாலையில் பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்) நடக்கிறது. 21 ஆம் தேதி காலையில் பட்டதாரி ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்), மாலையில் இடைநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT