ஈரோடு

துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்குசிறப்பு ஊதியம் வழங்கக் கோரிக்கை

புரெவி, நிவா் புயலில் பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

புரெவி, நிவா் புயலில் பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்துப் பேரூராட்சிகள் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சங்கத்தின், மாநில நிா்வாகிகள் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பேரூராட்சித் துறையில் பணிபுரியும் துப்புபுரவு மேற்பாா்வையாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். கீழ்நிலைப் பணியாளா்களுக்கான பதவி உயா்வை 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு இளைநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிவா், புரெவி புயலின்போது பணியாற்றிய துப்புரவு மேற்பாா்வையாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜனாா்த்தனன், பொருளாளா் காா்த்திக், ஈரோடு மாவட்டத் தலைவா் இளங்கோவன், திருப்பூா் மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT