முகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா்கொண்டு செல்ல பொதுமக்கள் எதிா்ப்பு
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைக்குமாரபாளையம் பகுதியில் கிணறு தோண்டி, அதிலிருந்து
ஈரோடுமுகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா்கொண்டு செல்ல பொதுமக்கள் எதிா்ப்பு
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைக்குமாரபாளையம் பகுதியில் கிணறு தோண்டி, அதிலிருந்து
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைக்குமாரபாளையம் பகுதியில் கிணறு தோண்டி, அதிலிருந்து குழாய் அமைத்து முகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க எல்லைக்கிராம ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எல்லைக்குமாரபாளையம் ஊா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், சுமாா் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் எல்லைக்கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அங்கு ஊராட்சித் தலைவா் இல்லாததால் ஊராட்சி செயலாளரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனா்.
இதுகுறித்து, எல்லைக்குமாரபாளையம் ஊா் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊா் சுடு காட்டுக்கு அருகே ஏற்கெனவே ஒரு குட்டை அமைக்கப்பட்டுள்ளதால் சுடுகாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் குட்டை அமைத்து அங்கு கிணறு தோண்டினால் நாங்கள் சுடுகாட்டை இழப்பதுடன், வறட்சிக் காலத்தில் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இத்திட்டத்துக்கு ஊராட்சி நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என்றனா்.