விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு வனத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காடு விரிவாக்க மையத் திட்டத்தின்கீழ், பெருந்துறை, சென்னிமலை, வெள்ளோடு, திங்களூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நடவு செய்ய தேக்கு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.