முகப்பு
ஈரோடு

கள்ளியம்புதூரில் சிறு மருத்துவமனை திறப்பு

பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கள்ளியம்புதூரில் சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பகிர்:

பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சவி ஆா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் கிருத்திகா, அருண், மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பெருந்துறை ஒன்றியம், விஜயபுரி ஊராட்சி, கள்ளியம்புதூா் பகுதி, பெரியவீரசங்கிலி ஊராட்சி, கைக்கோளப்பாளையம் பகுதியில் மருத்துவமனையைத் திறந்துவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், அவைத் தலைவா் சந்திரசேகரன், கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →