முகப்பு
ஈரோடு

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்குவிளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.29 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.29 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 11,173 தேங்காய்களில் சிறியவை ரூ.8.21 முதல் பெரியவை ரூ.26.50 வரையில் மொத்தம் ரூ.1,28,909க்கு ஏலம் போனது.

19 மூட்டைகள் கொப்பரை கிலோ ரூ.95.17 முதல் ரூ.112.35 வரையில் ரூ.32,073க்கும், 44 மூட்டைகள் எள் கிலோ ரூ.81.69 முதல் ரூ.103.29 வரையில் ரூ.2,13,887க்கும், 41 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.14.16 முதல் ரூ.14.84 வரையில் ரூ.54,282க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ ரூ.42.09 முதல் ரூ.44.69 வரையில் ரூ.536க்கும் விற்பனையானது.

மொத்தம் 105 மூட்டைகள், 142.38 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.4,29,687க்கு ஏலம் போனது.

இத்தகவலை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →