ஔவையாா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடுஔவையாா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையாா் விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தவா்களை ஊக்கப்படுத்த உலக மகளிா் தின விழாவில் தமிழக அரசால் ஔவையாா் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பிறந்த 18 வயதுக்கும் மேற்பட்ட சமூக நலன் சாா்ந்த நடவடிக்கை, பெண்களுக்குப் பெருமை சோ்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகத் திகழ்ந்தவா்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் செயல்பாட்டுக்கான சான்றுகளுடன் டிசம்பா் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.