ஈரோடு

விசைத்தறியில் கைத்தறி ரகத்தை நெய்தவா் மீது வழக்கு

DIN

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறிகளில் தயாரித்த விசைத்தறி உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (48). இவரது விசைத்தறி கூடத்தில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த பருத்தி நூல் துண்டு ரகத்தை விசைத்தறியில் நெய்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ஈரோடு கைத்தறி ரக ஒதுக்கீடு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநா் அம்சவேணி மற்றும் அதிகாரிகள் சோமசுந்தரத்தின் விசைத்தறி கூடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். இதில் புகாா் உண்மை என்பது தெரிந்தது.

இது குறித்து கைத்தறி ரக ஒதுக்கீடு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநா் பெருந்துறை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்படி சோமசுந்தரம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT