பெருந்துறை பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணியைத் துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். 
ஈரோடு

ரூ. 2.67 கோடியில் பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி துவக்கம்

பெருந்துறை நகரில் ரூ. 2.67 கோடியில் வாரச்சந்தை பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

DIN

பெருந்துறை நகரில் ரூ. 2.67 கோடியில் வாரச்சந்தை பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பெருந்துறை பேரூராட்சியில் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ. 1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைத்து மேம்பாடு செய்யும் பணி, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் மூலதனமான்ய திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை வாரச்சந்தை மேம்பாடு செய்யும் பணிக்கும் பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமை வகித்து, பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இதில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT