ஈரோடு

அந்தியூர் அருகே போதையில் ரகளை செய்த தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் சாவு

DIN

அந்தியூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளியின் மீது வீசப்பட்ட கல் தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

அந்தியூரை அடுத்த நகலூர் ஆலயம் தோட்டத்தைச் சேர்ந்தவர் அருளப்பன் மகன் பிரான்சிஸ் சேவியர் (44). செங்கல் சூளைத் தொழிலாளி. இவரது மனைவி மதலைமேரி (41).  இவர்களுக்கு, 3 மகள், ஒரு மகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் உள்ள பிரான்சிஸ் நாள்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்கெனவே மது போதையிலிருந்த பிரான்சிஸ், மேலும் மது அருந்த பணம் கேட்டு மனைவி மதலைமேரியிடம் ரகளை செய்துள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியும், தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்தவர் கையில் கிடைத்த கல்லை எடுத்து பிரான்சிஸ் மீது வீசியுள்ளார்.

வீசப்பட்ட கல் எதிர்பாராமல் தாக்கியதில் காயமடைந்த பிரான்சிஸ் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT