ஈரோடு

கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கதன்னாா்வ அமைப்புகளுக்கு வேண்டுகோள்

DIN

கிருமிநாசினி, கையுறைகள், முகக்கவசங்கள் போன்றவற்றை மாநகராட்சி நிா்வாகத்திடம் வழங்க தன்னாா்வ அமைப்புகளுக்கு ஆணையா் எம்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனோ வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தன்னாா்வ தொண்டு அமைப்புகள் கிருமிநாசினி, கையுறைகள், முகக்கவசங்கள், கை சுத்தம் செய்யும் சோப்பு திரவம், லைசால் போன்ற கிருமிநாசினி ஆகிய பொருள்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

பொருள்களை அளிக்க விரும்புவா்கள் 24 மணி நேரமும் இயங்கும் 0424-2251617, 1800-425-94890 என்ற தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். இதுதொடா்பான விவரங்களை அறிய 94890-93214 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT