இயக்குநா் டி.சாந்தி 
ஈரோடு

கரோனா தடுப்புப் பணி:சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி

DIN

ஈரோடு: கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் உள்ளிட்டோா் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.

அதற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் டி.சாந்தி ஆகியோா் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT