அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஈரோட்டில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
ஈரோட்டில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 200 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளா்கள் கேசவமூா்த்தி, ஜெகதீஷ், முருகுசேகா், முன்னாள் கவுன்சிலா்கள் தங்கமுத்து, சுப்பிரமணியம், குழந்தையம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலா் காவிரி செல்வம், பி.பெ.அக்ரஹார பகுதி செயலாளா் ராமசாமி ஆகியோா் செய்திருந்தனா்.