முகப்பு
வணிகம்

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

ரியல்மி நிறுவனத்தின் பி4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது குறித்து...

Updated On : 16 மார்ச், 2026 at 4:53 PM
ரியல்மி பி4 லைட் - படம் / நன்றி - ரியல்மி
பகிர்:

ரியல்மி நிறுவனத்தின் பி4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன்படி மார்ச் 19 ஆம் தேதி ரியல்மி பி4 லைட் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

இந்தியாவில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் கொடுக்கும் நிறுவனங்களில் ரியல்மி முன்னணியில் இருந்து வருகிறது.

பி4 லைட் 4ஜி உள்பட இதற்கு முன்பு பி4 வரிசையில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 6,300mAh பேட்டரி திறனுடன் இருந்த நிலையில், பி4 லைட் ஸ்மார்ட்போனானது 7,000mAh பேட்டரி திறனுடன் அறிமுகமாகிறது.

Advertisement

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த அறிவிப்பை ரியல்மி நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை.

எனினும், முந்தைய ஸ்மார்ட்போன்களில் இருந்து மேம்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் சில சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதாவது, 7,000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் சார்ஜ் நீடிக்கும் திறன் உள்ளதாக ரியல்மி நம்பிக்கை அளித்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போனில் அதிக பேட்டரி திறன் உடையதாக இருப்பதால், ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு பயனர்களிடையே அதிகரித்துள்ளது.

மார்ச் 19 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மி பி4 லைட் விற்பனை தொடங்குகிறது. ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் ரியல்மி கிளைகளிலும் ரியல்மி பி4 லைட் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

summary

Realme P4 Lite 5G launch in India set for March 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.