ஈரோடு

மொடக்குறிச்சியில் 35 மி.மீ. மழை பதிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 35 மி.மீ. மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 35 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மி.மீ): சென்னிமலை 26, கொடுமுடி 8.8, பெருந்துறை 6, ஈரோடு 5, கவுந்தப்பாடி 3.4, எலந்தைக்குட்டைமேடு 2.2, கோபி 2, பவானி 1.8.

திங்கள்கிழமை பகலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிரான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT