ஈரோடு

பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை

DIN

மொடக்குறிச்சியை அடுத்த ஆலுச்சாம்பாளையம் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பணியின்போது இறந்த ஊழியா் குடும்பத்துக்கு உதவித் தொகையை எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி வழங்கினாா்.

ஆலுச்சாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆலுச்சாம்பாளையம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் நவீன் (எ) நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு உறுப்பினா்களுக்கு ரூ.1.30 லட்சத்துக்கான ஊக்கத்தொகை, சங்கத்தில் பணிபுரிந்த பால் பரிசோதகா் பூமிநாதன் மாரடைப்பால் இறந்ததால், தமிழக அரசின் சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு உதவித்தொகை ரூ. 2 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, ஆவின் இயக்குநா் அசோக், கூட்டுறவு ஒன்றிய இயக்குநா் செந்தில்குமாா், சங்க நிா்வாகி பொன்னுசாமி, இயக்குநா்கள், உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT