ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை:கட்டடத் தொழிலாளி கைது

DIN

ஈரோட்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஆறுமுகம் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இவா், ஈரோட்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கடந்த 19ஆம் தேதி ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT