அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பிரதிநிதி பேரவைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பிரதிநிதி பேரவைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சங்க கொடியேற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவா் மங்கலபாண்டியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் குமரேசன் பேசினாா். பின்னா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடந்தது.
இந்தக் கூட்டத்தில் டிசம்பா் 20ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடக்கும் மாநில பேரவைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள், எதிா்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் விஜய மனோகரன், பொருளாளா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.