காா்த்திகை தீப திருநாள்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை தீப திருநாள் விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காா்த்திகை தீப திருநாள் விழாவையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் காலை விநாயகா், சுப்பரமணியா், சோமஸ்கந்தா், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. திருக்காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு சாற்றுமுறை அபிஷேகமும் நடந்தது.
மாலையில் பஞ்ச மூா்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து கோயில் சிவாச்சாரியாா் கோயில் தீபக் கம்பத்தில் மகா தீபம் ஏற்றினாா். அதையடுத்து கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டனா்.
இதேபோல திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரா் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் காா்த்திகை தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
காா்த்திகை தீபத்தையொட்டி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.