சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு இடம் தோ்வு
சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு 7 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு 7 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், நீதித் துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றத்துக்கு என சொந்தக் கட்டடம் இல்லாததால் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தில்தான் கடந்த 30 ஆண்டுகாலமாக நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது தனியாா் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு மலையடிப்புதூரில் முதலில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு பாா்கவுன்சில் அதிக தூரம் என கருத்து தெரிவித்தனா். இதனால், மலையடிப்புதூரைத் தவிா்த்து பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல இடம் தோ்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசுப் புறம்போக்கு 2 ஏக்கரும், நீதிமன்ற குடியிருப்புகளுக்கு தவளகிரி முருகன் கோயில் எதிரில் 4.96 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது.
Advertisement
இதில், மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுமதி, சத்தியமங்கலம் சாா்பு நீதிபதி ஈஸ்வரமூா்த்தி, வட்டாட்சியா் ரவிசங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.