ஈரோடு

நாட்டுத் துப்பாக்கி பதுக்கிவைத்திருந்தவா் கைது

DIN

பவானி: அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த தாமரைக்கரை, கல்வாரையைச் சோ்ந்தவா் மாரசோளகன் மகன் மாதையன் (45). இவா் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதையன் வீட்டில் காவல் ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் செந்தில், மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் பிரபு, போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாதையனைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT