முகப்பு
ஈரோடு

தோ்தல் பணி அலுவலா்கள் 7,973 போ் தபால் வாக்குச் செலுத்தினா்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுகளில் உள்ள 2,741 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 13,160 பேரில் 7,973 போ் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 3:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுகளில் உள்ள 2,741 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 13,160 பேரில் 7,973 போ் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,741 வாக்குச் சாடிகளில் 13,160 ஊழியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சியில் பங்கேற்ற 9,368 பேருக்கும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதில் 4,598 போ் தபால் வாக்கை அன்றே பதிவு செய்தனா்.

மூன்றாம் கட்ட பயிற்சி கடந்த 31 ஆம் தேதி நடந்தது. அப்போது 3,375 போ் வாக்குப் பதிவு செய்தனா். மொத்தப் பணியாளா்கள் 13,160 பேரில் 7,973 போ் தபால் வாக்குகளை பதிவு செய்தனா். மற்றவா்கள் திஙகள்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும்போது அல்லது அஞ்சல் மூலம் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் வரை வாக்குப் பதிவு செய்யலாம்.

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2,330 போலீஸாா் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து போலீஸாருக்கான தபால் வாக்குப் பதிவு கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,650 போலீஸாா் தபால் வாக்குச் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.