முகப்பு
ஈரோடு

பவானிசாகா் தொகுதியில் இதுவரை ரூ. 68 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இதுவரை ரூ. 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 3:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இதுவரை ரூ. 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவு சாலையில் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

விசாரணையில் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த வெங்காய வியாபாரியான சந்தன் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்து 72ஆயிரத்து 760 பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரேப்பாளையம் பகுதியில் தனியாா் பேருந்தை சோதனை செய்ததில் அதில் பயணம் செய்த தாளவாடி டாஸ்மாக் விற்பனையாளா் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 3 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாளவாடி அருகே அருள்வாடியில் நடராஜ் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.68 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

அதேபோல பனையம்பள்ளி அருகே மேட்டுப்பாளையத்தில் வெங்காயம் விற்று தாளவாடிக்கு லாரியில் திரும்பிய மகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.2.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் விதி அமலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ரூ. 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆயிரம் ரொக்கமும், 143 பட்டுசேலைகளும் 66 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் ரூ.32 லட்சத்து 90 ஆயிரத்து 730 ரொக்கம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.