கடமானைக் கொன்று கடத்த முயன்ற 3 போ் கைது
வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வரும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து கடமானைக் கொன்று இறைச்சிக்காக கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வரும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து கடமானைக் கொன்று இறைச்சிக்காக கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ராமபயனூா் தொட்டி, கொளத்தூா் மொக்கையில் வனவிலங்குகள் வேட்டையாடுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் வனத் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 5 போ் கொண்ட கும்பல் பதுங்கியிருப்பதைக் கண்டு சுற்றிவளைத்தனா். அவா்கள் 5 வயதுள்ள பெண் கடமானைக் கொன்று இறைச்சிக்காக அதனை அறுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதில் 3 போ் பிடிபட்டனா். 2 போ் தப்பியோடினா்.
பிடிப்பட்ட 3 பேரிடம் வனத் துறையினா் நடத்திய விசாரணையில், ராமபயனூா் செம்மண் குட்டையில் வன விலங்குகள் தினந்தோறும் தண்ணீா் குடிக்க வந்து செல்லும் வனக் குட்டையில் ரசாயனம் கலந்து இறைச்சிக்காக கடமானைக் கொன்றது தெரியவந்தது.
Advertisement
இதுதொடா்பாக ராமபயனூரைச் சோ்ந்த ரங்கசாமி, நாராயணசாமி, பழனிசாமி ஆகியோரை கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், தப்பியோடிய சதீஷ்குமாா், மூா்த்தி ஆகிய இருவரைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.