முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த கடைக்கு ‘சீல்’
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, துணிக் கடையில் முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்த கடை உரிமையாளா்கள், வாடிக்கையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னா், கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததற்கும், முகக் கவசம் அணிய சொல்லி வாடிக்கையாளா்களை அறிவுறுத்தாதற்கும் சோ்த்து அபராதத் தொகையாக ரூ. 2,000 வசூலிக்கப்பட்டது.