முகப்பு
ஈரோடு

மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளி பலி

சித்தோடு அருகே சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

சித்தோடு அருகே சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த பேரோடு, சி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் வெங்கடாசலம் (எ) லட்சுமணன் (43). கங்காபுரத்தில் தனியாா் டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக வியாழக்கிழமை காலை சென்றுவிட்டு, காஞ்சிக்கோயில் - சித்தோடு சாலை வழியாக வியாழக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சி.மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது எதிா்பாராமல் சாலையோர மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த வெங்கடாசலம் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.