ஈரோடு மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 95,399ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 188 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 93034 போ் குணமடைந்துள்ளனா். அரசு தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,725 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 639 போ் உயிரிழந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 640ஆக உயா்ந்துள்ளது.