இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி: இயக்குநா் ஆய்வு
இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி குறித்து விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.
இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி குறித்து விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசு விதைச் சான்று, அங்ககச் சான்று துறை மூலம் தரமான சான்று பெற்ற உயா் விளைச்சல் ரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்படும் ஈரோடு துல்லியப் பண்ணை உற்பத்தியாளா்கள் நிறுவனத்துக்கு வேளாண் விற்பனை, வணிகத் துறை மூலம் வழங்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இதனையும், விதை இருப்பு விவரம், விதை சுத்திகரிப்பு பணியையும் விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் சுப்பையா அண்மையில் ஆய்வு செய்தாா்.
இருப்பில் உள்ள சி.ஆா்.1009, டி.கே.எம்.13, ஆடி38, ஐ.ஆா்.20 வயல்மட்ட விதைக் குவியல்கள், சிப்பங்களின் எடை, விதை மாதிரி எடுக்கும் வழிகள், ஈரப்பதம் சரிபாா்த்தல் போன்றவற்றை பாா்வையிட்டாா்.
Advertisement
பின்னா், விளக்கேத்தி கிராமத்தில் அங்கக விவசாயம் செய்து வரும் பூபதிசுவாமி என்பவரின் மஞ்சள், முருங்கைத் தோட்டத்தை ஆய்வு செய்தாா். அவற்றின் தொழில்நுட்ப செயல்பாடுகள், உற்பத்தி, பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள் தயாரிப்பு போன்றவற்றைக் கேட்டறிந்தாா்.
விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் யசோதா, விதை பகுப்பாய்வாளா் நா்கிஷ், ஈரோடு துல்லியப் பண்ணை நிறுவன ஆலோசகா் வடிவேல், அலுவலா்கள் ஹேமாவதி, கணேசமூா்த்தி, தமிழரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.