முகப்பு
ஈரோடு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஈரோடு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஈரோடு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், கோபி வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 21 பஞ்சாயத்துகளில் உள்ள 354 குடியிருப்புகளில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணி துவங்கியது. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கணேசன் தலைமையில், ஆசிரியா் பயிற்றுநா், பள்ளித் தலைமை ஆசிரியா், சிறப்பாசிரியா், அங்கன்வாடி பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் .

இப்பணி குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஈரோடு மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சேகா் ஆய்வு செய்தாா். வெள்ளாங்கோவில், நாகதேவன்பாளையம் பகுதிகளில் தலா 3 இடங்களை அவா் பாா்வையிட்டு கணக்கெடுப்புப் பணியை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.