ஈரோடு

மது விற்பனை: உணவக உரிமையாளா் உள்பட இருவா் கைது

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட உணவக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட உணவக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, அந்தியூா் - பவானி சாலையில் உணவகம் அருகே நடத்திய சோதனையில் அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் அந்தியூா், முல்லை நகரைச் சோ்ந்த சிங்கதுரை மகன் தனபால் (42) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (45) கைது செய்யப்பட்டாா். இவரிடம் இருந்து 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT