கட்டடத் தொழிலாளி சாவு
பெருந்துறையில் புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.
பெருந்துறையில் புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் துக்கசாடு மகன் சானியாசாகு (52). பெருந்துறை புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணி நடைபெறும் பகுதியில் ஷெட்டில் குடும்பத்துடன் தங்கி, கட்டட வேலை செய்து வந்தாா். ஆகஸ்ட் 24ஆம் தேதி பகல் 11 மணியளவில் மேஸ்திரிடம் தலை வலிப்பதாகக் கூறியுள்ளாா். உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிந்தாா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.