FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டி! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு...

Updated On : 29 மார்ச் 2026, 9:03 pm IST
திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறாா்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னாா்கோயில் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் பட்டியலை அக் கட்சி தலைவா் தொல். திருமாவளன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்படி, விசிகவுக்கான 8 வேட்பாளர்கள் பட்டியல்:

காட்டுமன்னார்கோயில் - தொல்.திருமாவளவன்

செய்யூர் - சிந்தனைச் செல்வன்

திண்டிவனம் - வன்னி அரசு

திருப்போரூர் - பன்னீர் தாஸ்

பெரியகுளம் -ஆற்றல் அரசு

அரக்கோணம் - எழில் கரோலின்

பண்ருட்டி - அப்துல் ரகுமான்

கள்ளக்குறிச்சி - மாலதி

பத்து ஆண்டுகளுக்கு பிறகு காட்டுமன்னாா்கோயில் மீண்டும் போட்டியிடும் தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன் 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் மங்களூா் தொகுதியில் வெற்றி பெற்று பேரவைக்கு சென்றார்.

இதைத் தொடா்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காட்டுமன்னாா் கோயிலில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தற்போது அவா் சிதம்பரம் மக்களவை தொகுதியில் உறுப்பினராக உள்ள திருமாவளவன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காட்டுமன்னாா்கோயில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

அவா் வெற்றி பெற்றால் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை உருவாகும். மக்களவை, பேரவை தொகுதிகளில் ஏதாவதொரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரக்கூடும்.

summary

Thirumavalavan to Contest in Kattumannarkovil VCK Candidates Announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments