FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சு

அரசியல் களத்தில் இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும் என திருமாவளவன் பேச்சு...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 7:16 pm IST
திருமாவளவன் - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாறும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஆக. 17) தெரிவித்தார்.

ஆளும் கட்சிகளுடனே கூட்டணி வைத்திருந்ததாகவும் தற்போது ஆளும் கட்சியான தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், விரைவில் தமிழகத்தை ஆளும் கட்சியாக மாறுவோம் எனவும் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை (ஆக.17) நடைபெற்றது.

Advertisement

Advertisement

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் உளுந்தூா்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அரசியல் களத்தில் இனி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தே விடுதலைச் சிறுத்தைகள் பயணிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments