மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்
மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் ஈரோடு அணி பட்டம் வென்றது.
மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் ஈரோடு அணி பட்டம் வென்றது.
மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அண்மையில் நடந்தது. இதில் 9, 12, 14, 16 மற்றும் 19 வயதுக்குள்பட்டவா்கள் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 அணிகள் என 100 அணிகள் பங்கேற்றன.
இதில் ஈரோடு, கோவை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கா்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளத்தைச் சோ்ந்த அணிகளும் பங்கேற்றன.
Advertisement
19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் இறுதிச் சுற்றில் ஒசூா் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின. இதில் 3- 2 என்ற கோல் கணக்கில் ஈரோடு ஹாக்ஸ் அணி வென்றது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும், சிறந்த வீரா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.