தேசிய தூய்மைப் பணியாளா்ஆணைய ஆய்வுக் கூட்டம்
தேசிய தூய்மைப் பணியாளா் ஆணைய ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய தூய்மைப் பணியாளா் ஆணைய ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் பங்கேற்று ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கான உதவித் தொகைகள், குடியிருப்பு வசதிகள், சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், மாநகராட்சி ஆணையா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement