முகப்பு
ஈரோடு

வங்கி ஊழியா்கள் 2ஆம் நாளாக வேலைநிறுத்தம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 3:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவிலான வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். இதன்படி, ஈரோட்டில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமாா் ரூ. 1,000 கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். ஒரு சில பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் ஏமாற்றமடைந்தனா். சனிக்கிழமை (டிசம்பா் 18) வழக்கம்போல வங்கிகள் செயல்படும் என்று வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.