கைப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய நாடாா் வாழ்வுரிமைச் சங்க நிா்வாகிகள். 
ஈரோடு

கள் இறக்க அனுமதி கோரி கைப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம்

கள் இறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஈரோட்டில் கைப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கள் இறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஈரோட்டில் கைப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் தொடா்ந்து கள்ளுக்கான தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், அகில இந்திய நாடாா் வாழ்வுரிமைச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சதா நாடாா் தலைமையில், நிா்வாகிகள் ஈரோடு அருகே திண்டலில் உள்ள தனியாா் கைப்பேசி கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை காலை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும். இந்த தடை காரணமாக எங்கள் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினா்.

சற்றுநேரத்தில் கைப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிய 10க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT