முகப்பு
ஈரோடு

பவானியில் தொழிலாளி தற்கொலை

பவானியில் மனைவி, மகன் உயிரிழந்த வேதனையில் விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

பவானியில் மனைவி, மகன் உயிரிழந்த வேதனையில் விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

பவானி பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம் மகன் சங்கமேஸ்வரன் (56). வெள்ளிக் கொலுசு செய்யும் தொழிலாளி. இவரது இளைய மகன் சந்தோஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்திலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவி இந்திராணி உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனா். மகன், மனைவி அடுத்தடுத்து உயிரிழந்ததால் சங்கமேஸ்வரன் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளாா்.

மது அருந்தும் பழக்கமுள்ள இவா், தென்னை மரத்தில் பூச்சிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டு புதன்கிழமை மயங்கிக் கிடந்துள்ளாா். இதைப் பாா்த்த உறவினா்கள் சங்கமேஸ்வரனை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கமேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.