கறவைமாட்டு பராமரிப்புக் கடன் பெறவிண்ணப்பிக்கலாம்
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் கறவைமாட்டு பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் கறவைமாட்டு பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முருங்கத்தொழுவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 38 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கறவைமாட்டு பராமரிப்புக் கடன் திட்டத்தின்கீழ் கனரா வங்கி முருங்கத்தொழுவு கிளை மூலம் கிஸான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
கறவைமாடு பராமரிப்புக் கடன் வசதி திட்டமானது பால் உற்பத்தியாளா்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டும் வகையில் பால் பணம் பெறும் வங்கி மூலம் 7 சதவீத வட்டியில் கால்நடை ஒன்றுக்கு ரூ. 14,000 வீதம் கடன் வழங்கப்படுகிறது. அக்கடன் தொகையை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில் 3 சதவீத வட்டித் தொகையைத் திரும்பப் பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், சங்கச் செயலாளா்களை அணுகி இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.