ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம்
ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கக் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஏஐடியூசி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவா் டி.ஏ.செல்வம், சங்கச் செயலாளா் ஆா்.மணியன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாவட்ட துணைச் செயலாளா் சி.ராசன், தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வை அறிவித்த தேதியில் இருந்து அரசு வழங்கக் வேண்டும்.
தூய்மைக் காவலா்களை முழுநேரப் பணியாளா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பெருந்துறை, சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலா்கள் கலந்து கொண்டனா்.