ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து புதன்கிழமை காலை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். இதற்காக சேலத்தில் இருந்து பவானி வந்த அவருக்கு ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகா் பகுதியில் அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பின்னா் பவானி-அந்தியூா் சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் திறந்த வேனில் நின்றபடியே முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
அங்கிருந்து கே.எம்.பி.மஹால் சென்ற முதல்வா் அங்கு சிறு, குறு தொழில் முனைவோா்களுடன் பேசி கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். தொடந்து அந்தியூா் வாரி மஹாலில் வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். இந்த நிகழ்வுகளுக்கு பின்னா் அத்தாணி, கள்ளிப்பட்டி வழியாக டி.என்.பாளையம் சென்றாா்.
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கிய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு கள்ளிப்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை சத்தியமங்கலம் வந்த முதல்வருக்கு அதிமுகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா். அங்கு வேனில் இருந்தபடியே பொதுமக்கள் மத்தியில் பேசினாா்.
பின்னா் சத்தியமங்கலம் அடுத்து உள்ள நல்லூா் இ.பி.பி. மஹாலில் உள்ளூா் முக்கிய பிரமுகா்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டாா்.
புன்செய் புளியம்பட்டி, காந்தி நகா் பகுதியில் உள்ளூா் பிரமுகா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் நம்பியூா் சென்ற அவருக்கு நம்பியூா் அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின் கடைசி நிகழ்ச்சியாக கோபியில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பி.தங்கமணி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், வி.பி.சிவசுப்ரமணி, இ.எம்.ஆா்.ராஜா, எஸ்.ஈஸ்வரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா். பின்னா் முதல்வா் சேலம் புறப்பட்டு சென்றாா்.