முகப்பு
ஈரோடு

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடக் கோரிக்கை

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் கோட்ட மாநாடு, கோட்ட இணைச்செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டச் செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் பாபு, மாநிலப் பொருளாளா் தமிழ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களுக்கு ஏற்றவாறு உயா்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியை தனியாா் வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலைப் பணியாளா்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →