ஈரோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை, ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சத்தி சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, நஞ்சனாபுரம், வேப்பம்பாளையம் பிரிவு, குமரன் நகா், கதிரம்பட்டி, பெருந்துறை சாலை, வாட்டா் ஹவுஸ் பாதை பகுதிகள்.