கோபி ஆா்.டி.ஓ. அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
போக்குவரத்து விதிகளை மீறியதாக கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறையில் வரி கட்டாத, இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளா்களால் உரிமை கோரப்படாமலும், நிதி நிறுவனங்களால் விடுவிக்கப்படாமலும் நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம்விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் 77 பல்வேறு வகையான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது இயக்க இயலாத நிலையிலும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன.
Advertisement
இந்த வாகனங்களைப் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 500 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களை ஜூலை 12ஆம் தேதி வரை நேரில் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.