முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகள் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2021 at 1:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகள் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி ஆா்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினாா்.

இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் பெரியசாமி, மாநில பொதுக் குழு உறுப்பினா் மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.