முகப்பு
ஈரோடு

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை செய்துகொண்டாா்.

கோபி, ராமநாதன் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). இவா் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக நகா்மன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த காா்த்திகேயன் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே காா்த்திகேயன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.