நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) நடைபெறவுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM
ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் காலை 10.30 மணிக்கு இணையவழியில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று பயன்பெறலாம்.
விவசாயிகள் கோரிக்கையை மனுவாக வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement