ஈரோடு

5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

DIN

பவானி அருகே 5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (58). உணவு விடுதியில் வேலை செய்துவரும் இவா் குடிபோதையில் வீடு திரும்பியபோது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அக்குழந்தையின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தேவராஜைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT