முகப்பு
ஈரோடு

5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பவானி அருகே 5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பவானி அருகே 5 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (58). உணவு விடுதியில் வேலை செய்துவரும் இவா் குடிபோதையில் வீடு திரும்பியபோது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அக்குழந்தையின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தேவராஜைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.